web log free
June 29, 2026

ராஜித குறித்து சஜித் எடுக்கவுள்ள கடுமையான நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை நீக்குவதற்கு  தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அது தொடர்பிலான சட்ட நிலைமைகள் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட்டு வருகின்ற நிலையில், அதனை பொருட்படுத்தாது செயற்படுபவர்களுக்கு எதிராக கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் ராஜித சேனாரத்ன, அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயார் என ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

மேலும், சேனாரத்னவின் செயற்பாடுகள் தொடர்பில், அவருக்கு எதிராக கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்தன.

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு ராஜித்த சேனாரத்னவினால் தாங்களும் அழைக்கப்பட்டதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இப்போதும் அக்கட்சியின் அமைப்பாளர்கள் பலர்  ராஜித சேனாரத்னவை பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்க அழைப்பதில்லை. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd