web log free
April 28, 2025

10 அமைச்சுப் பதவிகளுக்காக குடும்பிச் சண்டை!

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் எஞ்சிய 10 அமைச்சுப் பதவிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சமகி ஜன பலவேக ஆகிய இரு கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி உருவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, அமைச்சரவை முப்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அவர்களில் இருபது பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக 10 அமைச்சர்களை நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அந்த பத்து அமைச்சுப் பதவிகளுக்கும் கடும் போட்டி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சி.பி.ரத்நாயக்க, ஜனக பண்டார தென்னகோன், விமலவீர திஸாநாயக்க உள்ளிட்ட 8 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அமைச்சுப் பதவிகளுக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சமகி ஜன பலவேகவின் திரு ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சர் பதவியை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ள தயார் என ராஜித சேனாரத்ன ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், சுகாதார அமைச்சராக இருக்கும் ரம்புக்வெல்ல இது தொடர்பில் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சமகி ஜன பலவேகவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd