web log free
September 08, 2024

சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் திட்டத்திற்கு விவசாயிகள் அமோக ஆதரவு

கேகாலை மாவட்டத்தில் சராசரியாக எட்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர் என்பதுடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் கேகாலை மாவட்டத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குரங்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தப் புள்ளிவிபரங்களின்படி, கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜிக விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் எப்பொழுதும் இவ்விடயம் கவனம் செலுத்தியும் இதுவரை தீர்வைக் காணவில்லை.

குறிப்பாக கேகாலையில் தென்னைச் செய்கை, வாழை உள்ளிட்ட பழச் செய்கைகள் குரங்குகளால் சேதமடைவதாகவும், இந்த நாட்களில் கேகாலையில் தேங்காய் ஒன்று 120 முதல் 130 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

கேகாலையில் ஆடு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், அவற்றிற்கு உணவு கிடைக்காததாலும், வீடுகளுக்குள் குதித்து எடுத்துச் சென்ற காலங்களும் உண்டு என ஒருங்கிணைப்புக் குழுவில் தெரியவந்துள்ளது. 

சீனாவிற்கு வழங்கவுள்ள 100,000 இற்கும் அதிகமான குரங்குகளை கேகாலையில் இருந்து பிடிக்க வேண்டும் எனவும், அதற்கு காலவரையறையின்றி அதிகபட்ச ஆதரவை வழங்க முடியும் எனவும் கேகாலை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.