web log free
April 11, 2026

35 கோடி பெறுமதி ஹெரோயின் மீட்பு

தென்கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 3,500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமென இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது 175 கிலோகிராம் ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார். 

கடற்படை, பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பில் நீண்ட நாள் மீன்பிடி படகொன்று நேற்று(16) ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டது.

ஹெரோயினுடன் 06 பேர் கைது செய்யப்பட்டதுடன் இன்று(17) அதிகாலை காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd