web log free
September 08, 2024

முன்னாள் சட்டமா அதிபரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை நாளை (ஏப்ரல் 19) பயங்கரவாத விசாரணைப் பிரிவில் (TID) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதிப்புரட்சி குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே அவர் TID முன் அழைக்கப்பட்டுள்ளார்.