web log free
October 18, 2024

மொட்டுக்குள் மூன்று அணி! விரைவில் பிரலயம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் குழுவும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் குழுவும் அதில் பிரதானமாக உள்ளதுடன், மற்றைய குழு ஜனாதிபதியுடன் பயணிப்பது பொருத்தமானது என்று கூறும் குழுவாகும்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது, ​​போயா தினத்திற்கு முன்னர் மொட்டு எதிர்க்கட்சிக்கு செல்ல தயார் என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டியலில் இருந்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு வரத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் மொட்டு எதிர்க்கட்சிக்கு செல்லும் திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.