web log free
April 29, 2025

கல்வி அமைச்சர் வௌியிடும் கவலை!

கல்வி அமைச்சின் செயலாளர் பல விவாதங்களை தவிர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், மற்றுமொரு மேலதிக செயலாளர் அவரை புறக்கணித்து இழுத்தடிக்கும் நடைமுறையை பின்பற்றுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தேசிய பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளர் அரிதாகவே பங்கேற்கும் கலந்துரையாடலில் கூட வாய்திறக்காமல் தரையையே உற்று நோக்குவதாகவும் அமைச்சர் கூறினார்.

கல்வி அமைச்சின் கல்விச் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர் ஒருவரின் ஆதரவின்றி கல்வி அமைச்சு 8 மாதங்களாக பல்வேறு சிரமங்களுக்குள்ளான நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தத்தை புறக்கணித்து தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கின்றன.

அனைத்து அரசுப் பாடசாலைகளின் முதல் தவணை 2025ஆம் ஆண்டு முதல் ஜனவரியில் தொடங்க உள்ள நிலையில், உயர்தர மாணவர்களின் விடைத்தாள்களை சரிபார்த்து முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமைச்சர் கூறினார்.

கூடுதல் செயலாளர் நீண்ட காலமாக அமைச்சில் அமர்ந்து அமைச்சரை புறக்கணித்து வருவதால், குறித்த மேலதிக செயலாளரை பதவியில் இருந்து நீக்கி, குறித்த மேலதிக செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கல்வி அமைச்சின் செயற்பாடுகளுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திய விடயங்களில் நாம் ஒன்றிணைந்து செயற்படும் வேளையில் அதிகாரிகள் இவ்வாறு செயற்படும் நிலை காணப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியதன் பின்னர் கல்வி அமைச்சு விரும்பிய இலக்குகளை நோக்கி நகர்ந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த அமைச்சினை யாராவது பொறுப்பேற்க விரும்பினால், பொறுப்பேற்பதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd