web log free
April 28, 2025

பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படும் அதிகாரம்

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி கடிதம் வழங்குவதை கல்வி அமைச்சு இடைநிறுத்தியுள்ளது.

புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் அதிகாரத்தை பாடசாலை அதிபருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd