web log free
May 02, 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் அல் கைமா அமைப்புக்கு தொடர்பு

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் பலமான தலைவர் ஒருவருடன் இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் ஒருவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது விடயம் குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு நேற்று (21) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் தெரிவித்தது. 

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் மாலத்தீவு நாட்டவர் எனவும், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அவரிடம் நடத்திய விசாரணையின் போது, ​​பிரதான சந்தேகநபர் தொடர்பில் இத்தகைய உண்மைகள் வெளியாகியுள்ளதாகவும் அவர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல், முகமது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா ஹக் என்பவருடனேயே இவ்வாறு தொடர்பு பேணியுள்ளார். 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரகாரம், புஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் விசாரணைக்காக விடுவிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடுமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், இந்த சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் விடுவிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.