web log free
May 02, 2024

மொட்டுக் கட்சிக்குள் பதவி மாற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2023ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் இன்று காலை 10.00 மணியளவில் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தலைமையில் கட்சி அலுவலகத்தில் ஆரம்பமானது.

அந்த முன்னணியின் தவிசாளராக இன்று பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு கட்சியின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்திய போதிலும், அவர் பங்கேற்க மறுத்துவிட்டார்.

அதன்படி இன்றைய பொதுக்குழு கூட்டம் கட்சி தவிசாளர் இல்லாமலேயே நடைபெற்றது.

அதன்பின், கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

இதன்படி, கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் செயற்படுவார்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு பதிலாக சிரேஷ்ட பேராசிரியர் பூஜ்ய தாகுர்வல தம்மரதன தேரர் கட்சியின் தவிசாளராக ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.

கட்சியின் ஏனைய பதவிகளில் மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தவிசாளராக சிரேஷ்ட பேராசிரியர் பூஜ்ய தொதரவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.