web log free
May 08, 2024

நெடுந்தீவு கொலை சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியிலுள்ள வீடொன்றில் கூரிய ஆயுதங்களினால் தாக்கி ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

51 வயதான சந்தேகநபர் இன்று(23) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3 பெண்களும் இரு ஆண்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்த பெண்ணொருவர் யாழ்.வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.