web log free
April 28, 2025

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தெருநாய்களின் தொல்லை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தெருநாய்கள் சுற்றித் திரிவதை விமான நிலையத்திற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிள் கண்டுள்ளனர். 

அந்த நாய்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழையும் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்துவதுடன் அவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்கிறது.

இது குறித்து அதன் பணியாளர்கள் குழுவிடம் கேட்டபோது, ​​இந்த நாய்கள் விமான நிலைய முனைய கட்டிடங்களின் நுழைவு வாயில்களில் தொங்கிக்கொண்டு விமான நிலைய வளாகத்தில் சுற்றித் திரிவதாக தெரிவித்தனர்.

இந்த நாய்கள் எப்படியாவது விமான நிலைய ஓடுபாதை அல்லது விமானக் கட்டடத்தில் நுழைந்தால், கடுமையான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

கடந்த வருடங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெருநாய்களை சுடுவதற்கு விசேட அதிகாரிகள் (டாக் ஷூட்டர்) நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd