web log free
March 25, 2026

நெடுந்தீவு படுகொலை சம்பவத்தில் 6வது நபரும் பலி

​நெடுந்தீவு படுகொலைச் சம்பவத்தில் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 100 வயது பெண்ணும் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

ஏப்ரல் 22 அன்று நெடுந்தீவில் ஒரு வீட்டில் வசித்த இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். 

தாக்குதலில் படுகாயமடைந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 100 வயதுடைய பெண் தாக்குதல் இடம்பெற்று ஐந்து நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வாரம் இந்த கொடூரமான குற்றத்தை செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார். 

சந்தேகநபரிடம் இருந்து 3 தங்கச் சங்கிலிகள், 2 ஜோடி தங்க வளையல்கள், 8 மோதிரங்கள், 1 ஜோடி காதணிகள், 1 தங்கப் பதக்கம், 2 கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd