web log free
September 09, 2025

மாணவிகள் மீது கை வைத்த பாடசாலை அதிபர் கைது

கம்பளை கல்வி வலயத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவிகளை இந்த அதிபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் புபுரஸ்ஸ பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

51 வயதுடைய அதிபர், பேருந்தில் வீட்டுக்குச் செல்லும் போது தனது பணிப் பையில் மறைத்துக்கொண்டு மாணவிகளின் மார்பு மற்றும் தொடைகளை தொட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd