web log free
September 09, 2025

ராஜபக்சக்களின் சூழ்ச்சி அம்பலம்

பொதுஜன பெரமுனவைக் கைப்பற்றுவதற்கான சூழ்ச்சியாகவே ராஜபக்ச குடும்பம் கட்சியின் தலைவர் பதவியை தம்மரதன தேரருக்கு வழங்கியுள்ளதாக அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் வெறும் தூதுவர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய சேனலொன்றுக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக செயற்படும் குழுக்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளதாக அனுர பிரியதர்ஷன யாப்பா இங்கு குறிப்பிட்டுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd