web log free
September 09, 2025

இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொலை

2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய இக்பால் என்றழைக்கப்படும் பாலி கயாரா என்ற தீவிரவாதி, பாகிஸ்தான் பொலிஸாரின் துப்பாக்கி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இக்பால் அல்-கொய்தா மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் கயாரா குழுவில் உறுப்பினராக செயற்பட்டார்.

இக்பால் பாகிஸ்தானில் மிகவும் தேடப்படும் ஒருவராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், கைபர்-பக்துன்க்வா பொலிஸ் தலைமையதிகாரி- அக்தர் ஹயாத் கான், தேடுதல் ஒன்றின்போது, இக்பால், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியபோது பொலிஸார் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் இக்பால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd