web log free
May 05, 2024

ரணில் அணியில் இருந்து மூன்று ஆளுநர்கள் தயார்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் தயா கமகே ஆகியோருக்கு ஆளுநர் பதவி வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை நான்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது இங்கிலாந்துக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவர் வருகையின் பின்னர் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.