web log free
September 08, 2024

நாட்டில் மினி சூறாவளி எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் கொந்தளிப்பான வளிமண்டலம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன்காரணமாக எதிர்வரும் சில தினங்களில் இந்த அமைப்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி பின்னர் சூறாவளியாக மாறும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

5 மற்றும் 10 வடக்கு அட்சரேகை மற்றும் 90 மற்றும் 100 கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசும், அவ்வப்போது அது மணிக்கு 60 கிமீ வேகத்தில் அதிகரிக்கும்.

01 மற்றும் 04 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 85 மற்றும் 92 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடையில் காற்று குவிதல் வலயம் காரணமாக, இந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றர்களாக காணப்படுவதுடன், அது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

5 மற்றும் 10 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 90 மற்றும் 100 கிழக்கு தீர்க்கரேகைகள் மற்றும் 01 மற்றும் 04 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 85 மற்றும் 92 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் எதிர்காலத்தில் கடல்சார் சமூகம் மற்றும் மீனவர்கள் பயணிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடற்பரப்புகளில் தற்போது மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மக்கள் உடனடியாக கரை அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கடற்படையினர் மற்றும் கடல்சார் சமூகம் கோரப்பட்டுள்ளது.