web log free
September 08, 2024

ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு கூட்டத்தில் சஜித்திற்கு வழங்கப்பட்ட அதிகாரம்

அரசாங்கத்தில் இணைந்து கொள்வது அல்லது பதவிகளை ஏற்காமல் இருப்பது மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற விசேட யோசனைக்கு கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் கூடிய ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவினால் இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்வரும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு விசேட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ஜனநாயகத்தை மீறும் அடக்குமுறை அரசில் இணையக் கூடாது, பதவிகளைப் பெறக்கூடாது என செயற்குழுவில் முதல் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மக்கள் பெயரால் இப்படிச் செய்வது மிகப் பெரிய தவறு என்றும், அப்படிச் செய்யக் கூடாது என்றும், முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டுக்கு ஆதரவான முற்போக்கு செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சி என்ற ரீதியில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற மற்றுமொரு பிரேரணைக்கு செயற்குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் ஒரு பரந்த கூட்டணியை கட்டியெழுப்பவும், அந்தக் கூட்டணியை கட்டியெழுப்புவதற்கு முழு அதிகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கட்சித் தலைவர் என்ற முறையில் ஒப்படைப்பதற்கும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் யாப்புக்கு அமைய கட்சியின் செயற்குழுவின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக தேவையான ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அதிகாரம் வழங்கவும் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.