web log free
March 25, 2026

பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பில் காரசாரமான விவாதம் காரணமாக பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்துவது சட்டவிரோதமானது என நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உரிய விவாதம் நடத்தப்படுமா? இல்லை? என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd