web log free
April 18, 2024

பலாங்கொடையில் மர்மம்

பலாங்கொடை, சமனல வத்த பகுதியில் 5 நாட்களுக்குள் இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி சமனல வத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் ஒருவர் கடந்த 3ஆம் திகதி காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவர்கள் இருவரும் காணாமல் போன விதம் மர்மமாக இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனவர் துஷார சம்பத் என்ற திருமணமானவர் எனவும், கடந்த 8ஆம் திகதி காலை தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிய தேனீர் குடித்துவிட்டு இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மதியம் 11 மணி ஆகியும் அவர் வீட்டுக்கு வராததால், அவரது மனைவி தேயிலைத் தோட்டத்துக்குச் சென்று பார்த்தபோது, ​​காணாமல் போனவர் அணிந்திருந்த இரண்டு செருப்புகளில் ஒன்று, தேயிலை கொழுந்து பறிக்கப் பயன்படுத்திய மூட்டையும் அங்கு காணப்பட்டன.

முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் நேற்று (09) குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், காணாமல் போனவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

சமனல வத்த பகுதியைச் சேர்ந்த (45) வயதுடைய ஒருவரும் கடந்த (03) முதல் காணாமல் போயுள்ளதுடன், இன்றுடன் (11) ஒன்பது நாட்களாகின்றன.

அவருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் சஹான் குமார தர்மசிறி என்ற பாடசாலைச் சிறுவனும் (09) காணாமல் போயிருந்த நிலையில், அவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வண்ணத்துப்பூச்சி தோட்டம் பகுதியில் சிறுத்தைப்புலிகள் அடிக்கடி நடமாடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், குதிரைகள் மற்றும் சிறிய பசுக்கள் அடிக்கடி காணாமல் போவதாக பிரதேசவாசிகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறியும் நோக்கில் நேற்று (10) பகல் முழுவதும் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.