web log free
July 02, 2025

டெங்கு குறித்து மிகவும் அவதாரமாக இருக்கவும்

கண்டி, குருணாகல், காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துச் செல்வதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் ஆணையாளர், வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, டெங்கு அபாய நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

இந்நிலையில், மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (15) இடம்பெறவுள்ளதாக டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாண ஆளுநரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd