web log free
April 19, 2024

வசந்த முதலிகேவின் பதவி பறிபோகிறது

வசந்த முதலிகே இராஜினாமா செய்துள்ளதாகவும், பல்கலைக்கழக மாணவர் பேரவையின் புதிய அழைப்பாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர் பேரவை அமர்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி களனி பல்கலைக்கழகத்தில் இந்த புதிய நியமனத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சப்ரகமுவ, ருஹுணு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இத்தேர்தலில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியம் கடந்த காலங்களில் முன்னெடுத்த அரசியல் நடவடிக்கைகளுடன் உடன்படாத காரணத்தினால் பல்கலைக்கழகங்கள் இணைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர்களில் ஒருவரான ஜனித் ஜனஜய அல்லது திறந்த பல்கலைக்கழகத்தின் ரிபாத் குருவி (பைரா) ஆகியோர் புதிய அழைப்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.