web log free
March 29, 2024

நாடு திரும்பினார் ஜனாதிபதி


சீனாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, யூ. எல். 869 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த குழுவினர் வந்தடைந்துள்ளனர்.

சீனாவில் இடம்பெற்ற சர்வதேச மாநாடொன்றில் கலந்துக்கொள்வதற்காக, கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் 27 பேர் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.