web log free
April 29, 2025

பொரளையில் இன்று காலை ஒருவர் சுட்டுக்கொலை

பொரளை லெஸ்லி ரணகல மாவத்தை புகையிரத கடவைக்கு அருகில் 53 வயதுடைய நபர் ஒருவர் இனந்தெரியாத இருவரினால் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான களனியைச் சேர்ந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd