web log free
March 11, 2025

பதவி பறிபோகும் அபாயத்தில் உள்ள அலி சப்ரி ரஹீம் மீண்டும் டுபாய் பயணம்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்கம் கொண்டு வரும்போது சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 7.5 மில்லியன் ரூபா அபராதம் செலுத்தி விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை தானாக முன்வந்து பதவி விலகுமாறு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று (26) தீர்மானம் முன்வைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கொண்டு வந்த பிரேரணையை எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த பிரேரணைக்கு ஆளும் கட்சியின் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏனைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பிரேரணையை முன்வைப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

சுங்க பிரிவில் பிடிபட்டு அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் மீண்டும் டுபாய் நோக்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd