web log free
April 29, 2025

கொழும்பில் இருவரை கடத்திய அறுவர் கைது

பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் கடத்திச் சென்ற 6 சந்தேக நபர்கள் தெமட்டகொடையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெமட்டகொடை வேலுவனாராமயவுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்களை கடத்திய போது சந்தேகநபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 22 மற்றும் 28 வயதுடையவர்கள் மற்றும் கொழும்பு 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்.

கடத்தப்பட்ட பெண் வத்தளை, ஹெந்தலை, எட்டம்பொலவத்தை வீதியில் வசிப்பவர் எனவும், ஆண் மாகொல தெற்கில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd