web log free
March 29, 2024

துப்பாக்கிதாரியிடம் இருந்து உயிர் தப்பினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வடமராட்சிக் கிழக்கு, மருதங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை மக்கள் சந்திப்பை நடத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது அரச புலனாய்வாளர்கள் என தங்களை அடையாளப்படுத்திய நபர்களினால் துப்பாக்கி முனை கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. 

துப்பாக்கியுடன் வந்த ஒருவர் தப்பிச் சென்றார். மற்றொருவர் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

வந்தவர்கள் புலனாய்வு பிரிவினர் என தெரியவருகிறது.