web log free
April 29, 2025

தமிழ் டயஸ்போரா முக்கியஸ்தர் பிரபல பிக்குவுடன் சந்திப்பு

கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான றோய் சமாதானம் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரைச் சந்தித்து, தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். 

நாட்டில் இடம்பெற்ற யுத்த மோதல்களின் போது நாட்டை விட்டு வெளியேறிய பெருந்தொகையான மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அவ்வாறான மோதல்கள் மீண்டும் ஏற்படாதவாறு நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குத் தேவையான சூழலை உருவாக்கி, அதனை முன்னெடுப்பதன் அவசியத்தை ரோய் சமாதானம் வலியுறுத்தினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd