web log free
September 11, 2025

கண்டியில் மனித உரிமை செயற்பாடுகள் முடக்கம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி பிராந்திய அலுவலகம் பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

கடந்த 29ம் திகதி இரவு ஆணைக்குழுவின் செயலாளர் பொலிஸாருடன் வந்து அலுவலகத்திற்குள் யாரும் நுழைய முடியாதவாறு அலுவலகத்திற்கு சீல் வைத்ததோடு பொலிஸ் பாதுகாப்பும் பயன்படுத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதியுடன் அலுவலத்தின் பிராந்திய இணைப்பாளராக நியமிக்கப்பட்ட அதிகாரியை அந்த அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் இங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd