web log free
May 04, 2024

ஜனாதிபதி - கூட்டமைப்பு இடையே இன்று மாலை முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய விசேட கலந்துரையாடலொன்று இன்று (ஜூன் 8) பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

வடக்கில் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் இராணுவத்தினருக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் தமிழ் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.