web log free
May 03, 2024

எரிபொருள் வரிசை ஏற்பட இதுவே காரணம்

கடந்த வாரம், 255 சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் தேவையான குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக சில பகுதிகளில் பெட்ரோல் நிலையங்களின் அருகே வரிசைகள் ஏற்பட இதுவே காரணம் என தெரியவந்துள்ளது.

எனவே எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.