web log free
May 03, 2025

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்குள் திடீரென நுழைந்த இம்தியாஸ் கைது

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின் போது தேவாலயத்திற்குள் நுழைய முயன்ற இம்தியாஸ் என்ற நபர் சந்தேகத்தின் பேரில் கரையோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மாத்தளை அகலவத்தை பிரதேசத்தில் நிரந்தர வதிவிடமாகவும், கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட 46 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேவாலயத்துக்குள் துதிப்பாடல்களை கேட்க வேண்டும் என்பதற்காக வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189வது வருடாந்த பெருவிழா இம்மாதம் 13ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதனை ஒட்டி தினமும் ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன்படி, நேற்றுமுன்தினம் ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் தேவாலயத்திற்குள் பிரவேசிக்க வந்தபோது பிரதான வாயிலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் சந்தேகத்தின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து இரண்டு தேசிய அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd