web log free
July 01, 2025

துப்பாக்கி கேட்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி

குரங்குகளை நாட்டிற்கு அனுப்பும் தீர்மானத்தை அரசாங்கம் மாற்றினால், வன்னி விவசாயிகளின் பயிர்களை பாதுகாக்க துப்பாக்கிகளை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

குரங்குகள் மற்றும் எருமை மாடுகளினால் வன்னி விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்.பி. கூறினார்.

விவசாயிகளின் பயிர்களைப் பாதுகாக்க உரிமத்தின் அடிப்படையில் விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் முன்பு கோரிக்கை விடுத்தபோதும் அரசாங்கத்திடம் நல்ல பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd