web log free
April 16, 2024

'மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் செயற்படுவேன்'

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராண நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது, கடுமையான தீர்மானத்தை எடுப்பதற்கு தாம் தயார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இதன்போது செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ள காவிந்த ஜயவர்தன, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான ஏனைய உறுப்பினர்கள் தீர்மானம் குறித்து தனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.