web log free
May 06, 2024

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமின் அரசியல் எதிர்காலம்

சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்திய போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் விசாரணை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது கட்சித் தலைவர் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என அவர் கூறினார். 

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒழுக்க விதிகளின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தனர்.