web log free
February 08, 2026

ஜனாதிபதியுடன் இணைந்து ஆட்சி அமைக்க சஜித் அணி தயார் நிலையில்! மொட்டுக்குள் பிளவு உச்சத்தில்!

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தை நடத்துவதற்கு இடையூறுகள் ஏற்பட்டால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதில் அவரது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மொட்டுக் கட்சி சிரேஷ்டர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு மொட்டு கட்சி தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதும் இதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியினால் அழைக்கப்பட்ட கூட்டத்தில் சம்பந்தப்பட்ட சிரேஷ்டர்கள் பங்கேற்கவில்லை.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்காக பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டை வழிநடத்த தயாராக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி  தெரிவித்துள்ளது. 

இதேவேளை மொட்டுக் கட்சிக்குள் ஜனாதிபதிக்கு ஆதரவான அணி மற்றும் எதிரான அணி என இரு பிரிவுகள் இருப்பதால் பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd