web log free
July 30, 2025

மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

மாகாண ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கும் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்குபுர புதன்கிழமை (14) தெரிவித்தார்.

மாகாண ஆளுநர்களுடனான சந்திப்பின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள மாகாண ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd