web log free
May 02, 2024

ஜெனீவா முன்றலில் காட்சிப்படுத்தப்படும் இலங்கை இனப்படுகொலை நிழற்படங்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் 53 வது மனித உரிமை கூட்டத்தொடர் இன்று (19-06-2023) ஜெனிவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

அதேநேரம் இலங்கை தமிழர்களுக்கு நீதிகோரி அனைத்துலக மனித உரிமைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை அரசினால் தமிழர்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் நிழற்பட ஆதாரங்களை ஜெனிவா முன்றலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அங்கே வருகின்ற வெளிநாட்டினர், பொதுமக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நிழற்படம் குறித்து தமிழின செயற்பாட்டாளர் விளக்கமளித்து வருகின்றனர்.

கடந்த பல வருடங்களாக இந்த நிழற்படக் காட்சி இடம்பெற்று வருகின்றது. இன்று வெளிநாட்டவா்கள் பலா் இவற்றை பாா்வையிட்டுவருவதையும் அவதானிக்க முடிந்தது.