web log free
July 01, 2025

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு மைத்திரி அணி முழு ஆதரவு

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை முன்வைத்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டமூல வரைவில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும், குழுக் கூட்டத்தின் போது அந்த விடயங்களை முன்வைப்பதாகவும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தற்போதுள்ள நிறுவனத்தில் தீர்மானங்களை எடுத்து முதுகெலும்புடன் வேலை செய்யும் அதிகாரிகள் அதிகம் இல்லை எனவும் தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் மிகவும் முக்கியமானது என்றும், இதற்கு தனது கட்சியின் முழு ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஊழல் ஒழிப்பு சட்டமூலம், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை ஆதரித்தல் மற்றும் பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் சிவில் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd