web log free
February 08, 2026

அமைச்சர் டிரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தென் மற்றும் மேல் மாகாணங்களில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் நேற்று (21) அழைப்பு விடுத்திருந்த கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

கொலையாளிகள் தொடர்பான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும், இவ்வாறான நடவடிக்கைகளில் எவருக்கும் தேவையற்ற செல்வாக்கு செலுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் பொலிஸ் மா அதிபருக்கு டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் குறிப்பாக அந்த இரண்டு மாகாணங்களிலும் பணிபுரியும் சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளின் திறமையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தகைய அதிகாரிகளை உடனடியாக நீக்கி உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என பணித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd