web log free
May 03, 2025

இலங்கையின் கடன் பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை

இலங்கையில் நிலவும் கடன் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை செப்டெம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருடன் கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாடு தற்போது எதிர்நோக்கி வரும் கடன் நெருக்கடியை தீர்ப்பதற்கு பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் விரிவான மூலோபாய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேலும், கடன் மறுசீரமைப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறைவு செய்வதில் தனது முதன்மை கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd