web log free
October 30, 2025

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (24) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக கொழும்பின் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணி நேரம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd