web log free
May 03, 2025

பாதாள உலகக் குழு உறுப்பினர் அதிகாலையில் சுட்டுக்கொலை!

மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற பல கொலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர் இன்று (24) அதிகாலை அம்பிலிபிட்டிய வெலிக்கடை 99 சந்தியில் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளார்.

இராணுவ சிறப்புப் படையின் முன்னாள் சிப்பாயான சசிந்து சந்தாமினி மெண்டிஸ் (24) சம்பவத்தில் உயிரிழந்துள்ளார், மேலும் அவர் ஹினடியன் மகேஸ் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியை சுட்டவர் என்றும் விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் கைது செய்ய தேடப்பட்டு எம்பிலிபிட்டிய வெலிக்கடை பகுதியில் உள்ள அவரது சகோதரரின் வீட்டில் பதுங்கியுள்ளதாக விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் விசேட அதிரடிப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3.50 மணியளவில் சந்தேக நபரை கைது செய்ய படையினர் சென்ற போது, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், விசேட அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் சந்தேக நபர் காயமடைந்து எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி மினுவாங்கொட பிரதேசத்தில் நபர் ஒருவரின் மரணம், மற்றுமொருவரை சுட்டுக் காயப்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் இந்த சந்தேகநபர் ஈடுபட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd