web log free
April 30, 2025

கிழக்கு மக்கள் பிரச்சினை குறித்து ஆளுநரும் ஐதேக பொதுச் செயலாளரும் ஆராய்வு

கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. 

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவும் கலந்து கொண்டார். 

கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஐக்கிய தேசிய கட்சியின் கிழக்கு ஒருங்கிணைப்பாளர்கள் எடுத்துக்கூறினர். 

இவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd