web log free
September 08, 2024

அவுஸ்திரேலியாவில் அநுரவிற்கு அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களின் பல கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி நாட்டில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்ட அவர், நேற்று (27) பேர்த்தில் இலங்கையர்களின் சந்திப்பில் உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தார்.

எம்.பியின் அவுஸ்திரேலியா விஜயத்திற்காக இரண்டு விமான நிறுவனங்களின் டிக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தங்குவதற்கு இரண்டு ஹோட்டல்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக எம்.பி., நண்பரின் தனி வீட்டில் தங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள ஜே.வி.பி உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமாரவின் பாதுகாப்பிற்காக தனியார் பாதுகாப்பு சேவை ஒன்றின் ஆதரவும் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

எம்.பி.யை மாநாட்டுக்கு அழைத்துச் செல்ல கட்சியினர் பங்கேற்கும் பாதுகாப்பு வளையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார அவுஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் விஜயம் செய்ய உள்ளார்.