web log free
October 18, 2024

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கோட்டா தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அல்-ஜசீரா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றில் கோட்டாபய ராஜபக்ச, இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்ததாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அதற்காகவே, அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.