web log free
December 16, 2025

பொலிஸார் கண்டுகொள்ளவில்லை, யாழில் விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொதுமக்கள்!

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பிரதேசத்தில் விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த கிராம மக்கள் குழு ஒன்று விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு யுவதிகளையும் மற்றுமொருவரையும் கைது செய்து கொக்குவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விபச்சார விடுதியை சோதனையிட்ட போது, அங்கிருந்த மேலும் இருவர் வீட்டின் பின்பகுதியில் இருந்து தப்பி ஓடியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்த விபச்சார விடுதி தொடர்பில் கொக்குவில் பொலிஸாருக்கு பல தடவைகள் அறிவித்தும், பொலிஸார் விபச்சார விடுதி தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த விபச்சார விடுதி மட்டுமின்றி யாழ்ப்பாணம் குளப்பிட்டி சந்தி தொடக்கம் ஆனைகோட்டை பகுதி வரை வரிசையாக விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாகவும் இதுவரையில் எந்தவொரு விபச்சார விடுதிக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.

குளப்பிட்டி கிராம மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இரு யுவதிகளையும் மற்றைய நபரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd