web log free
February 08, 2026

சஜித்துக்கு அறிவுரை கூறிய ஜனாதிபதி

அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இன்று இடம்பெற்ற “அமரவிரு அபிமான் 32” நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்களுக்கான தமது பொறுப்புக்களை நிறைவேற்றி நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமாறு வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

விழாவில் பேசிய ஜனாதிபதி, விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளின் வளர்ச்சியை வலியுறுத்தி, உள்நாட்டுத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல், ஏற்றுமதி சார்ந்த தொழில்களாகவும் உருவாக்க வேண்டும் என்றார். 

Last modified on Monday, 03 July 2023 14:29
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd