web log free
September 10, 2025

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலனை ஆள் வைத்து கடத்திய காதலி!

காதல் உறவை புறக்கணித்த இளைஞன் கடத்தப்பட்டமை தொடர்பிலான முறைப்பாட்டையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

பின்வத்த பிரதேசத்தில் வசிக்கும் கடத்தப்பட்ட இளைஞரின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட இளைஞனும், யுவதியும் காதலித்து வந்ததாகவும், குறித்த இளைஞன் யுவதியை திருமணம் செய்து கொள்ள விரும்பாத காரணத்தினால் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்வத்த பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் மேலும் சிலருடன் வந்த யுவதி இளைஞனை கடத்திச் சென்று வெறிச்சோடிய வீடொன்றில் மறைத்து வைத்து மீண்டும் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படும் யுவதி மற்றும் அவருடன் வந்த நபர்களை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd